மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். செஸ் ஒலிம்பியாட் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுடன் இன்று இரவு முதலமைச்சர் ஸ்டாலின் உணவருந்துகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் விளையாடினார். செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் நேரில் ஆய்வு செய்து முதலமைச்சர் செஸ் விளையாடினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாளை மறுநாள் துவங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில், நாளை துவக்க விழா மற்றும் ஆக., 10ல் நிறைவு விழா நடக்கிறது. இப்போட்டியில், சர்வதேச 187 நாடுகளைச் சேர்ந்த 350 அணிகளின், 2,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…