தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் விரைவில் நலமடைய விழைகிறேன் என தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திடீரென உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் கால்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என கூறி மூன்று விரல்களை அகற்றியுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஒரு சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என தேமுதிக சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் " எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி அறிந்தேன் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப விழைகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் ஆண்டிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…