தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக இன்று காலை மதுரை புறப்படுகிறார். இன்று மாலை அங்கு நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார்.
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரையில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தின் திறப்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நூலகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து காலை 8.45 மணிக்கு காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 மணிக்கு பழவந்தாங்கல் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையம் செல்லும் முதலமைச்சர் காலை 10 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு, நண்பகல் 11.25 மணிக்கு மதுரை விமான நிலையத்தை அடைகிறார்.
அங்கிருந்து கார் மூலம் மதுரை சர்க்கியூட் ஹவுசுக்குச் சென்று ஓய்வெடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரை கலைஞர் நூற்றாண்டு விழாவிற்குச் சென்று, மாலை 4.30 மணிகு நூலகத்தை திறந்துவைக்கிறார். பின்னர், மதுரை ஏ.ஆர். மைதானத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று பேசுகிறார். அதைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரவு 8.55 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…