Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தென்காசி தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை: காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

Baskaran Updated:
தென்காசி தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை: காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி Representative Image.

தென்காசி: தென்காசி தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் காங்.வேட்பாளர் பழனி நாடார் வெற்றி உறுதியானது.

தமிழக சட்டச்சபைக்கு கடந்த 2021இல் தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார், அதிமுக சார்பில் செல்வ மோகன்தாஸ் என்பவர் போட்டியிட்டார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிப்பெற்றார்.இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 370மட்டுமே ஆகும். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியை எதிர்த்தும், தபால் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் வழக்கு தொடுத்தார்.

இதனை விசாரித்த நீதிபதி தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணிக்கை செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று தென்காசி தொகுதியில் பதிவான 2589 தபால் வாக்குகளை எண்ணும் பணி மீண்டும் தொடங்கியது. இதற்காக அந்த தொகுதியில் போட்டியிட்ட 17வேட்பாளர்களும் வந்திருந்தனர். தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடந்த வாக்கு எண்ணிக்கைக்கு,200போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தபால் வாக்கு எண்ணிகை முடிவில், 368 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்