குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அணைத்து தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவைராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை மதம் 24-ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். திர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட உள்ளனர்.
இவர்கள் இருவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் உள்ள தங்களது கூட்டணி அரசியல் கட்சியினரிடம் சென்று ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர். இன்று நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற செயலக வளாகத்திலும், நாடாளுமன்ற செயலக வளாகத்திலும் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மாநிலங்களவை மற்றும் மக்களவை எம்.பி-களும் எம்.எல்.ஏ-களும் வாக்களிக்க உள்ளனர். எம்.பி.க்களுக்கு பச்சை நிற வாக்குசீட்டும், எம்.எல்.ஏ-களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கும் எம்.பி. எம்.எல்.ஏ-களுக்கு அதற்கான தேர்தல் விதிகளின்படி வந்து வாக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் சார்ப்பில் போட்டியிடும் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…