தக்காளி விலை நாடு முழுவதும் உயர்ந்துள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனையாவது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
வெயில், மழை உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களால் தக்காளியின் வரத்து குறைந்ததால், தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக அதன் விலை கிலோ ரூ.100-ஐத் தாண்டி விற்பனையாகிவருகிறது. தமிழகத்தில் பண்ணை பசுமைக் கடைகள், ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையை அரசு செய்துவருகிறது. இருந்தபோதும், தக்காளியின் விலை கிலோ ரூ.130 என்ற அளவிலேயே இருந்துவருகிறது.
இதேபோல், சின்னவெங்காயம் (சாம்பார் வெங்காயம்) உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை தாறுமாறாக அதிகரித்துவருகிறது. இதனால், ஏழை, நடுத்தரக் குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அங்குள்ள உத்தரகாசி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ. 200 முதல் ரூ.250வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி இந்த அதிரடி விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ள உத்தரகாண்ட் மக்கள், சமையலில் தக்காளியை சேர்ப்பது அவசியமா? என யோசிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…