பெங்களூருவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறைக்கு செல்போன் எடுத்துவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என்பதை கண்டுபிடிக்க சோதனை நடத்தும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு, ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளி கூட்டமைப்பு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த பல பள்ளிகளில் செல்போன் எடுத்து வருவதை தடுப்பதற்காக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனையிட்டபோது மாணவர்களின் பையில் செல்போனோடு, ஆணுறை, லைட்டர்கள், சிகரெட், போதைப்பொருள் போன்றவை கண்டெடுத்துள்ளனர்.
இதேபோல ஒரு மாணவியின் பையில் இருந்து ஆணுறை, வாய்வழி கருத்தடை மருந்துகள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை விசாரித்தபோது நண்பர்களை கைகாட்டி மாற்றி பேசியுள்ளனர்.
மாணவர்களின் நடவடிக்கைகளை கண்டு ஆடிப்போன ஆசிரியர்கள், உடனே சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்துள்ளனர். பின்னர், மாணவர்களின் பையில் செல்போன் இருக்கிறதா என்று சோதனை செய்ததில், பைகளில் இருக்க கூடாத பொருட்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த பொருட்களை கண்டுபிடித்த மாணவர்கள் சில நாட்களாகவே ஆசிரியர்கள் மீது தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்ததாக சம்பந்தபட்ட பெற்றோர்களின் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கண்ணீர் விட்டனர்
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் 10 நாட்கள் விடுமுறையும் வழங்கி உள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…