கேரளாவின் மலப்புரத்தில் தட்டம்மை நோய் அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு, இந்திய குழந்தைகள் நல மருத்துவர் அகாடமி தலையிட்டு தடுப்பூசி போடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மலப்புரம் மாவட்டம் தட்டம்மையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய இந்திய குழந்தை மருத்துவ அகாடமியின் கேரள பிரிவு மாநிலத் தலைவர் டாக்டர் ஜோஸ் ஓசெப், “தற்போதைய நிலவரப்படி, அனைத்து மாநிலங்களும் தட்டம்மை பாதிப்பை எதிர்கொள்கின்றன. கேரளாவில், குறிப்பாக மலப்புரம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 160 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மாவட்டத்தில் இதுவரை அம்மை நோயால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.” என்று கூறினார். தொற்றுநோய்க்குப் பிறகு தட்டம்மைக்கான தடுப்பூசி விகிதம் குறைந்து வருவதை அடுத்து அவரது கருத்துக்கள் வந்தன.
“வரும் நாட்களில் இது பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகபட்ச தடுப்பூசி பாதுகாப்புக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கிறோம்.”என்று டாக்டர் ஜோஸ் மேலும் கூறினார்.
முன்னதாக, நவம்பர் 24 அன்று, உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தட்டம்மை நோய்த்தடுப்பு கணிசமாகக் குறைந்துள்ளது என்றும், இதன் விளைவாக கிட்டத்தட்ட 40 மில்லியன் குழந்தைகள் கடந்த ஆண்டு தட்டம்மை தடுப்பூசி போடுவதை தவறவிட்டனர் எனத் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…