ஈராக்கில் மூக்கில் ரத்தம் வடிய செய்யும் புதுவகையான மர்ம காய்ச்சலுக்கு பலரும் பலியாகி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்நோய் இந்தியாவிற்குள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் மற்ற வைரஸ் தொற்றுகளை போல இதன் பிறப்பிடமும் ஆப்பிரிக்க ஆகும். இந்த வைரசுக்கு காங்கோ காய்ச்சல் என பெயர் வைத்துள்ளனர்.
கால்நடைகளில் இருக்கும் உண்ணி, இறைச்சிக்காக அவை வெட்டப்படும்போது அந்த துணிகள் மூலம் இந்த காய்ச்சல் பரவுகிறது. இந்த காய்ச்சலோடு வாந்தியுடன் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் ரத்த கசிவு ஏற்படுகிறது. அத்ததுடன் மூக்கில் இருந்து தொடர்ந்து ரத்தம் வெளியேற செய்து பாதிக்கப்பட்டவரை உயிரிழக்க செய்கிறது. தற்போது 33 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது இளம் வயதினரை கூடுதலாக எச்சரிக்கிறது.
உடலில் ரத்தக்கசிவு ஏற்படுத்த கூடிய இந்த காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பொசி கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறிவரும் நிலையில் ரிபாவிரின் என்ற வைரஸ் தடுப்பு மருந்து சிகிக்சை பலன் தருவது சற்று ஆறுதலை தருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…