Pakistan Latest News : பாகிஸ்தானில் கோதுமை விலை உச்சத்தில் உள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதேபோல், தற்போது பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், கைபர் பாக்துன் குவா மாகாணத்தில் கோதுமை விலை உச்சத்தில் உள்ளது.
பிரதமர் கண்டனம்
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப், “கைபர் பாக்துங்குவா மாகாண முதல்வர் கோதுமை மாவின் விலையை 24 மணி நேரத்திற்குள் 400 ருபாய்க்கு விற்பணை செய்ய வேண்டும். மேலும், முதல்வர் இதை செய்யவில்லை என்றால் என் ஆடைகளை விற்றாவதும் நான் கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்துவேன்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், “முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வாக்குறுதியை நிறைவேற்றாததால் நமது ஆட்சியில் பொருளாதாரம் இந்த நிலைக்குச் சென்றுள்ளது. மேலும், என் உயிரைக் கொடுத்தாலும் நமது நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன்” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…