உணவுத் தட்டுப்பாட்டின் முதல் சமிக்கையாக பிரான்ஸ் நாட்டில் கடுமையான கடுகு பற்றாக்குறை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போர் மற்றும் கனடாவில் நிலவி வரும் வறட்சி காரணமாக பிரன்ஸ் நாடு முதல் முறையாக கடுகு பற்றாக்குறையை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அங்கு கடுகு விலை சில்லறை கடைகளில் 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து பிரெஞ்சு விவசாயிகள் கடுகு உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் விளைவிக்கப்பட்ட தானியங்களை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாகவும், இதனால் உலகம் முழுவதும் உனவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐநா கவலை தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் பிரான்ஸ் நாட்டில் கடைகளில் கடுகுக்கு பெரும் கிராக்கி ஏற்ப்பட்டுள்ளது. சிலர் பிரிமீயம் தொகை செலுத்தி கடுகு வாங்கி செல்வதாக தகவல்கள் வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…