India : நேசனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், செல்ல குமார், விஜய் வசந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அனுமதியின்றி இந்த போராட்டம் நடைபெற்றதால் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில், “அன்னை சோனியா காந்தி மற்றும் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை பொய் வழக்குகள் தொடுத்து பழிவாங்க துடிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து இன்று டெல்லியில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல குமார், மாணிக்கம் தாகூர், தேசிய செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் மற்றும் ஏனைய தலைவர்களுடன் கைது செய்யப்பட்டோம்” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…