பிரியங்கா காந்தி வத்ராவுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ட்விட்டரில் இதை உறுதிப்படுத்தியுள்ள பிரியங்காகாந்தி , அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்திக்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று ராஜஸ்தானின் ஆல்வாருக்குச் செல்லவிருந்த ராகுல் காந்தி, உடல்நலக்குறைவால் தனது பயணத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, ஆல்வாரில் காங்கிரஸ் கட்சியின் 'நேத்ரத்வ் சங்கல்ப் ஷிவிர்' நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.
இவர்கள் தவிர காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பவன் கேரா மற்றும் கட்சியின் எம்பி அபிஷேக் மனு சிங்வி போன்ற பல காங்கிரஸ் தலைவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் நேற்று மாலை, ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கேயும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…