மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கோயிலில் மர்ம நபர் ஒருவர் உண்டியலை உடைத்து திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் சுகா கிராமத்தில் உள்ள கோவிலுக்குள் சட்டை அணியாத திருடன் ஒருவன் கோயிலின், கருவறைக்குள் நுழைந்து அவன், திருடுவதற்கு முன் சாமி தரிசனம் செய்கிறான். இச்சம்பவம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடந்துள்ளது, தற்போது திருடனை பிடிக்க போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய இரண்டு பெரிய கோவில் மணிகள் மற்றும் காணிக்கைகளையும் திருடன் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ பதிவிட்ட டுவிட்டர் பயனர் ஒருவர், கடவுளின் இருப்பிடத்தில் ஒரு பக்தன் திருடினால், அது திருட்டு அல்ல. ஒரு பக்தன் கடினமான காலங்களில் கடவுளிடம் உதவி கேட்பான் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…