காங்கிரஸ் தலைவர் தேர்தல் சலசலப்புக்கு மத்தியில், மூத்த தலைவர் திக்விஜய சிங், சோனியா காந்தியை டெல்லியில் இன்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தால் அக்டோபர் 17 அன்று கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அக்டோபர் 19 அன்று நடைபெறும். இது நடக்கும்பட்சத்தில், இருப்பது ஆண்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி நடக்கும்.
முன்னதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சசி தரூர் ஆகியோர் ஏற்கனவே தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டி நேற்று தான் சூடுபிடித்தது. ராஜஸ்தான் முதல்வர் தான் தேர்தல் களத்தில் இறங்கலாம் என்று தெளிவான குறிப்பைக் கொடுத்தது மற்றும் வேட்புமனு சம்பிரதாயங்களைப் பற்றி விசாரிக்க கட்சியின் தேர்தல் குழுத் தலைவரை சசி தரூர் சந்தித்தார்.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் 24 முதல் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…