கடந்த 1977, 80,84, 1991 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ. ஆக வெற்றி பெற்ற சேடபட்டி முத்தையா, 1991 - 96 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.
2 முறை எம்.பி., ஆகவும் முத்தையா பதவி வகித்துள்ளார். பெரியகுளம் தொகுதியில் எம்.பி., ஆக வெற்றி பெற்று வாஜ்பாய் அரசில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.கடந்த 2006 ல் அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய முத்தையா, தி.மு.க.,வில் இணைந்து தேர்தல் பணிக்குழு உறுப்பினர் பதவியிலும் இருந்துள்ளார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 76 வயதில் காலமானார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…