காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (75) கொரோனாவுக்கு பிந்தைய பிரச்சினைகள் காரணமாக இன்று டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளதோடு, சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக ஜூன் 2 ஆம் தேதி சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வந்தார். இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே அவர் ஜூன் 8 ஆம் தேதி அமலாக்க இயக்குனரகம் முன் ஆஜராக இருந்தார். கொரோனா பாதிப்பை காரணம் காட்டி ஆஜராக அவகாசம் கேட்டிருந்தார். இப்போது ஜூன் 23 ஆம் தேதி அவர் ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பியுள்ளது. அப்போதாவது ஆஜராவாரா எனும் கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…