தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம் சந்துர்த்தி மண்டலத்தில் இளம்பெண்ணை சிலர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், காதலனை கரம் பிடிக்கவே கடத்தல் நாஅடகம் ஆடியதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம் சந்துர்த்தி மண்டலத்தில் தந்தையுடன் கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பிய வழியில் 4 பேர் கொண்ட கும்பல், இளம் பெண் ஷாலினியை கடத்திச் சென்றது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் காலையில் கடத்தப்பட்ட பெண் மாலையில் மணக்கோலத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், அவள் விருப்பத்துடன் ஞானேஸ்வருடன் (ஜானி) என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
ஷாலினி, ஞானேஸ்வர் என்ற ஜானியை காதலித்து வந்துள்ளார் கடந்த ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அப்போது ஷாலினி மைனர் என்பதை சுட்டிக்காட்டிய பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஜானியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். தற்போது அவர் சிறையில் இருந்து விடுதலையான நிலையில், இருவரும் மேஜர் என்பதால் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…