பொய்யான விளம்பரங்களை கொடுத்து மற்றும் நுகர்வோரை நம்பவைத்து மக்களை ஏமாற்ற வேண்டுமென்கிற நோக்கத்துடன் செய்கிற வணிகங்கள் அனைத்தும் unfair trade practices தான்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தி சேர்ந்த 38 வயது நபருக்கு முன்பக்க தலையில் வழுக்கை விழுந்துள்ளது, அதில் செயற்கை முறையில் முடி நட்டால் முடி வளர ஆரமிக்கும் என தொலைக்காட்சியில் வந்த விளம்பரத்தை பார்த்து அவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர்கள் உடனே முடி நடும் பணியை முடித்துள்ளனர், 2014 நட்ட முடி தற்போது வரை வளரவே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் அவர்கள் சரியான பதில் வழங்கவில்லை, இதனால் சென்ற வருடம் கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அவருடைய வழக்கை விசாரித்த நீதிபதி, முடியை நடுவதற்காக வாங்கிய தொகையுடன், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ஒன்றரை லட்சமும், வழக்கு செலவான 10 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் 4 லட்ச ரூபாயை அந்த நிறுவனம், பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.
ஏற்கனவே ஆண்கள் தலையில் முடி கொட்டுகிறது என கூறி மன உளைச்சலில் இருப்பார்கள், இதில் இதுபோன்ற பொய்யான விளம்பரங்களை கொடுத்து அவர்களை நம்பவைப்பதி குற்றமே என வழக்கறிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…