அதிமுக-வின் 7 வங்கி கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல RBI இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் பிரபல அதிமுக கட்ச்சியில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது ஈபிஎஸ் கை ஓங்கியுள்ளது.அதன்படி, தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என அனைத்து முக்கிய பதவிகளும் ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் உள்ளது.
இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்களாக இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை மாற்ற ஈபிஎஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, அதிமுகவின் 7 வங்கி கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல RBI இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 கணக்கு பணப்பரிவர்த்தனை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…