தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழைக் காரணமாக கோவை வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று தேனி மற்றும் திண்டுக்கல் போன்ற 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடுகிறது.
இந்த கனமழை காரணமாக கோவை மற்றும் வால்பாறை, நீலகிரி போன்ற பகுதிகளில் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணை நிரம்பி வழிவதால், காவிரி கரையோரத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மக்கள் வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…