சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவில் கனமழை பெய்துவந்த நிலையில் நேற்று இரவு மூன்றாவது நாளாக கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.
கந்த சில நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் வெப்ப சலனம் காரணமாக இரவு நேரங்களில் கனமழை பெய்துவருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை தொடங்கி விடிய விடிய சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை தியாகராய நகர் கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுரங்க பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும்,ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மழையால் ஏற்பட்ட பாதிப்பின் மீட்புப் பணியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…