இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
கொரோனா 4 வது அலை அச்சத்தை போக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள், எந்த தடுப்பூசியை முதல் 2 டோஸ்களாக செலுத்தி கொண்டார்களோ, அதனையே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகவும் செலுத்தி கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனம் கோர்போவாக்ஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு இரண்டில் ஏதும் இரண்டு தவணையாக செலுத்தியிருந்தாலும். செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள், இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என தேசிய தொழில்நுட்ப அறிவுறுத்தலுக்கான கொரோனா பணிக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதன் அடிப்படையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்போவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்போவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…