சென்னை: தமிழக தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் தற்போதைய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு உள்ளார். இவர் வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாக செயலாளர் சிவதாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமைச்செயலாளர், டிஜிபி ஆகியோர் ஓய்வு பெறுவதால் புதிய அதிகாரிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தலைமைச்செயலாளர், டிஜிபி தேர்வு தொடர்பாக உள்துறை செயலர் அமுதா தலைமையிலான குழு டில்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமை செயலாளர் பதவிக்கு சிவதாஸ் மீனா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…