Tamilnadu News Live : சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனையில் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தீவிரமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா அறிகுறி ஏற்பட்டால் சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, கொரோனா 3-வது அலையில் காய்ச்சல் அறிகுறியுடன் வந்தவர்களில் 3-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதேபோல், தற்போது காய்ச்சலுடன் சிகிச்சைக்கு வந்த 2 ஆயிரத்து 297 பேரில் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மாறுபட்ட புதிய அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, சுகாதார அதிகாரி டாக்டர் ஜெகதீசன், “தொண்டை வலி, இருமல், சுவையின்மை மற்றும் காய்ச்சலுடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் முன் கூட்டியே தேவையான சிகிச்சை மற்றும் தனிமைப் படுத்த முடியும்” என கூறியுள்ளார்.
இதேபோல், கொரோனா தொற்று அதிகரித்து வந்தால் ஊரடங்கு போட வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…