Corona Situation : உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரொனா பரவல் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது 3ம் அலை பரவி வருகிறது, விரைவில் 4 வது அலை இந்தியாவில் தொடங்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு வரவாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் செல்ல வேண்டும் என பல கட்டுப்பாடுகள் போடப்பட்டன. மேலும், மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு புதிய வகைக் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட இடங்களில் 100 பேரில் 3 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத்யாக தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க வேண்டியது நமது கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…