Tamilnadu News Live : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,57,637 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் 12,081 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…