Corona Situation : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழக கொரோனா நிலவரம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆண்கள், 13 பெண்கள் என மொத்தம் 35 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 21 பேர் உள்பட 7 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மீதமுள்ள 31 மாவட்டங்களில் யாருக்கும் கொரோன தொற்று புதிதாக பாதிக்கப்பட்டவில்லை.
கொரோனா இல்லாத மாவட்டம்
இந்நிலையில் தமிழகத்தில் அரியலூர், தர்மபுரி உள்பட 15 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பும் இல்லை, சிகிச்சையிலும் ஒருவர் கூட இல்லை.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 22 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து 58-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…