Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவன் உயிரை பறித்த பந்து...கிரிக்கெட் விளையாட்டால் விபரீதம்..!

madhankumar May 29, 2022 & 11:18 [IST]
மாணவன் உயிரை பறித்த பந்து...கிரிக்கெட் விளையாட்டால் விபரீதம்..!Representative Image.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுபாஷ் குமார் என்ற மாணவன் கிரிக்கெட் பந்து தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவது முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையானது விடப்பட்டுள்ளது. விடுமுறையை மகிழ்ச்சியாக அனுபவிக்க மாணவர்கள் சுற்றுலா, விளையாட்டு என பல்வேறு முறைகளை பயன்படுத்திவருகின்றனர். 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நயினார்கோயில் வன்னிவயல் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிக்குமார். இவருடைய 11 வயது மகன் சுபாஷ் குமார், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று இவர் தனது வீட்டின் அருகே சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சக மாணவன் அடித்த பந்து எதிர்பாராதவிதமாக சுபாஷ் குமார் நெஞ்சில் பட்டுள்ளது. இதனால் மயக்கமடைந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

இதனைப்பார்த்த சக நண்பர்கள் சுபாஷ் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்று பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். குழந்தைகளை விளையாட அனுப்பும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சொல்லி அனுப்ப வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்