ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் பரவ துவங்கிய குரங்கு அம்மை நோய், தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரவுகிறது. இது விரைவில் நம் நாட்டின் பக்கமும் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100யை கடந்துவிட்டது. தமிழகத்தில் பரவவிடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை இந்தியா தொடர்ந்து பின்பற்றி வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு பரவும் பட்சத்தில் அதனை தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றுவோம் என தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…