தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக வடக்கு மாவட்டங்களிலும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நாளை மறுநாள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் நீலகிரி கோவை திருப்பூரு கிருஷ்ணகிரி தருமபுரி மற்றும் சேலம் நாமக்கல் திருச்சி கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…