கடலூர் மாவட்டம் மணாடிகுப்பம் பகுதியில் கபடி விளையாட்டின் போது வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காடாம்புலியூரை சேர்ந்த கபடி வீரர் விமல், நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மணாடிகுப்பம் பகுதியில் மாநில அளவிலான நடந்த கபடி போட்டியில் ரைடு சென்றார், பின்னர் எதிரணி வீரரை தொட முயற்சி செய்தார். அப்போது எதிரணி வீரர்கள் மொத்தமாக சூழ்ந்து அவரை பிடிக்க வந்த போது அவர் தப்பிக்க நினைத்துள்ளார்.
ஆனால் அவரை விடாமல் வீரர்கள் பிடித்து கீழே தள்ளி அமுக்கியதால் மூச்சி திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…