தேர்வு மையத்திற்கு வெளியே மனைவி வரும் வரை குழந்தையை தாய் போல பார்த்துக்கொண்ட கணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நேற்றைய தினம் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஆண்களை விட பென்களே அதிகளவில் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் தேர்வறைக்கு பாலூட்டும் தாய்மார்கள் கைக்குழந்தையுடன் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அதன்படி கோவை மாவட்டம் நீலம்பூரில் உள்ள கே.பி.ஆர் கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு பெண்மணி ஒருவர் கைக்குழந்தையுடன் வந்திருந்தார். அந்த பெண்மணி தேர்வெழுத தேர்வறைக்கு சென்ற நிலையில், அவருடன் வந்திருந்த கணவர் மரத்தடியில் குழந்தைக்கு தொட்டில் கட்டி குழந்தையை தாய் போல பார்த்துக்கொண்டது பலரையும் கவர்ந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…