அதிமுகவிற்கு எனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் அதிமுகவின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை தற்போது ஆங்கரித்துள்ள நிலையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது தற்போது அதிமுகவில் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் திணை விதைத்தவர்கள். அவர்கள் வினை விதைத்தவர்கள். ஆட்சி, அதிகாரம், வசதி வாய்ப்பு தாண்டி தொண்டர்கள் ஆதரவு அவசியம்.
பொது கூட்டத்தில் நடந்த கூத்துக்கள் எல்லாத்தையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள், அங்கு இருப்பவர்கள் எண்ணம் அசிங்கங்கள் சிங்கங்கள் எல்லாம் எங்கள் பக்கத்தில் இருக்கிறார்கள், நாங்கள் எப்போது நரிகள் கூட்டத்திற்கு செல்ல மாட்டோம் என கூறியுள்ளார். ஜெயக்குமாரை நிதி அமைச்சராகியது யார் என அவரே சொல்லட்டும். தர்மயுத்தம் தொடங்கிய போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தேன். அதற்கு பிறகு சந்திக்கவில்லை. ஓ.பி.எஸ் எனது நண்பர். எம்.ஜி.ஆர் கட்சி நயவஞ்சகர்கள் கையில் உள்ளது. உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை முறையீடு செய்தோம்.
எனவே கட்சியின் நிலைமையை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும் நிர்வாகிகளின் பெரும்பான்மையை வைத்து தலைமையை முடிவு சியா முடியாது, தொண்டர்களின் பெரும்பான்மையை வைத்துதான் தலைமையை முடிவு செய்ய முடியும், மேலும் அரசியலில் நீட் தேர்வு எல்லாம் வைக்க முடியாது என கூறியுள்ளார்.
பதவி கொடுத்த பிறகு தான் எடப்பாடியின் உண்மையான குணம் தெரிந்தது. நேர்மையாக செயல்படுவதுதான் ராஜதந்திரம். இங்கு ஐ.பி.எல் ஏலம் நடந்து கொண்டிருக்கிறது. அருவருப்பாக உள்ளது என கூறிஉள்ளலர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…