மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராகவும், துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இருவரையும் வாழ்த்தி வெளியிட்டுள்ள ட்வீட்டில் உத்தவ் தாக்கரே, "புதிதாக பதவியேற்றுள்ள மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு வாழ்த்துகள். உங்களுக்கு மகாராஷ்டிராவுக்காக நல்ல பணிகளை செய்ய வாழ்த்துகிறேன்!" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்த பிறகு புதன்கிழமை இரவு, உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். உத்தவ் தாக்கரே தனது பதவி விலகலை பேஸ்புக் லைவ் மூலம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கிடையே தேவேந்திர ஃபட்னாவிஸ் நேற்று மாலை தான் முதல்வராகவோ அமைச்சரவையிலோ இடம் பெறப்போவதில்லை எனக் கூறிவந்த நிலையில், நேற்று இரவு நடந்த பதவியேற்பு நிகழ்வில் துணை முதல்வராக பதவியேற்றது பாஜகவினருக்கே ஷாக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்பு முதல்வராக பதவி வகித்தவர் தற்போது துணை முதல்வர் பதவிக்கு இறங்க வேண்டுமா என பாஜகவில் பலரும் முணுமுணுத்தாலும், மஹாராஷ்டிராவில் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…