Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடும் நிதி நெருக்கடியால் லேப்டாப் வழங்குவது குறித்து முடிவு செய்யவில்லை..! - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

Baskaran Updated:
கடும் நிதி நெருக்கடியால் லேப்டாப் வழங்குவது குறித்து முடிவு செய்யவில்லை..! - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்Representative Image.

கோவை: கொரோனாவுக்கு பின் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்குவதா என முடிவு செய்யவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கோவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா பாதிப்புக்கு பின் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் நிதிப்பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதா அல்லது டேப்லெட் வழங்குவதா என்று முடிவு செய்யப்படவில்லை என்றார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தினார். இதனால் மாணவர்கள் பயனடைந்தனர். ஆனால் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முறையாவது வழங்குவார்களா என்று மாணவர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்