Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாமனாரை காலால் மிதித்து கொன்ற மருமகள்....ராஜஸ்தானில் பயங்கரம்..!

madhankumar July 17, 2022 & 18:24 [IST]
மாமனாரை காலால் மிதித்து கொன்ற மருமகள்....ராஜஸ்தானில் பயங்கரம்..!Representative Image.

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாரா மாவட்டத்திலுள்ள நாத்புரா கிராமத்தை சேர்ந்தவர் பதியா கட்டாரா, இவருக்கும் இவரது மருமகளுக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. 

இந்நிலையில் சம்பவத்தன்று மாமனாருக்கும் மருமகளுக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மருமகள் மாமனாரை தாக்கியுள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மருமகளை பிடித்துள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத மருமகள் மாமனாரை காலால் பலமுறை எட்டி உதைத்துள்ளார். இதில் சுருண்டு விழுந்த மாமனாரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்த அவர் பின்னர் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்