Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எகிறும் விலைவாசி:- விவாதம் நடத்த தயாராகும் அரசு...!

Bala July 30, 2022 & 12:16 [IST]
எகிறும் விலைவாசி:-  விவாதம் நடத்த தயாராகும் அரசு...!Representative Image.

எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த இரண்டு வாரங்களாக முடங்கியது.  இதனையடுத்து மக்களவையில் திங்கள் கிழமை அன்று விலைவாசு உயர்வு தொடர்பாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கிய நிலையில், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முற்றிலும் முடங்கியது. இந்தச் சூழலில் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குணமடைந்து நாடாளுமன்றம் வரத்தொடங்கியுள்ளதால், வரும் திங்கள் கிழமை விலைவாசி தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனை உறுதிப்படுத்தும் வகையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், பிரகலாத் ஜோஷியும், விவாதங்களை நடத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மக்களவையில் விவாதம் முடிந்ததும், மறுநாளே செவ்வாய்கிழமை அன்று மாநிலங்களவையிலும் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் நடத்தப்படும் என தெரிகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்