India : உலக யோகா தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படும் நிலையில் யோகாவின் அவசியம் குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கலைகளில் முக்கியமானதாக யோகா உள்ளது. இந்த யோகா பயிற்சி உடல் மற்றும் மனம் இரண்டையும் ஒரு மனதாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்நிலையில், ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது..
இந்நிலையில், யோகாவின் முக்கியத்துவம் குறித்து ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, “தொற்றா நோய்களும் வாழ்க்கை முறை சிக்கல்களால் ஏற்படும் உடல்நல சீர்கேடுகளும் , குறிப்பாக இளம் வயதினரிடையே பெருகி வரும் தற்காலச் சூழலில் , யோகா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சிறந்த ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…