தலைநகர் டெல்லியில் உள்ள ரூ போலீஸ் ஸ்டேஷனில், திடீரென நுழைந்த ஒரு கும்பல் தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் ஆனந்த் விஹார் போலீஸ் ஸ்டேசனில் இந்த சம்பவம் கடந்த ஜூலை 31ல் நடந்ததாக கூறப்படுகிறது. எனினும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக வெளியான வீடியோவில், 12 பேர் கொண்ட கும்பல் போலீஸ் ஸ்டேசனுக்குள் புகுந்து போலீசை கடுமையாக தாக்கினர். அருகில் இருந்தவர்கள் இதை தடுக்காமல் போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான போலீஸ் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சியும் அந்த கும்பல் கடுமையாக தாக்கிய காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
போலீஸ் ஸ்டேசனில் இருந்த மற்றொரு போலீஸ் இதை படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ வைரலான நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…