Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே வீட்டில் 2,000 துப்பாக்கித் தோட்டாக்கள்.. சுதந்திர தினத்தை சீர்குலைக்க திட்டமா?

Sekar August 12, 2022 & 15:11 [IST]
ஒரே வீட்டில் 2,000 துப்பாக்கித் தோட்டாக்கள்.. சுதந்திர தினத்தை சீர்குலைக்க திட்டமா?Representative Image.

சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, டெல்லி காவல்துறை 2,000 தோட்டாக்களை ஒரே இடத்தில் மீட்டுள்ளது மற்றும் வீட்டின் உரிமையாளர் உட்பட 6 பேரை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஒரு நெட்வொர்க் அமைத்தது செயல்பட்டு வந்தார்கள் என்று தெரிகிறது. எனவே இதன் பின்னால் பயங்கரவாத தொடர்புகள் இருக்கலாம் என்று அந்த கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இருவர் ரஷீத் மற்றும் அஜ்மல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்கள் குறித்த முழு விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருவரையும் பற்றி ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவர் டேராடூனைச் சேர்ந்தவர். அவர் தோட்டாக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் என்று தெரிய வந்துள்ளது..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்