Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு...!

madhankumar August 12, 2022 & 14:52 [IST]
பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு...!Representative Image.

பானிபூரி சாப்பிட்ட 100க்கும் அதிகமானோர் திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹூக்ளி மாவட்டத்தில் சுகந்தா கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட டோகாசியா பகுதியில் சாலையோர கடைகளில் பானி பூரி விற்பனை மிகவும் ஜோராக நடைபெறுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட பானிப்பூரி கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் ரசித்து, ருசித்து பானிபூரி சாப்பிட்டனர். திடீரென்று அவர்களில் பலருக்கும் திடீரென்று வாந்திம், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

ஒரே நேரத்தில் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டீரென்று வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. அவர்கள் சாப்பிட்ட பானிபூரியால் தான் உடல் உபாதை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பானிபூரியில் ஊற்றப்படும் நீர் சுத்தமானதாக இருந்ததா என்றும் சுகாதாரத்துறையின் சிறப்பு குழு ஆய்வு செய்து வருகிறது. சமீப காலமாக பானிபூரியில் கலக்கப்படும் தண்ணீர் மூலமாக காலரா உள்ளிட்ட உடல் உபாதைகள் வருகிறது என்று கூறி பல இடங்களில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்