Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அவன் பொருள எடுத்து அவனையே போடணும்....டெங்குவை ஒழிக்க அசத்தல் ஐடியா...!

madhankumar July 07, 2022 & 12:35 [IST]
அவன் பொருள எடுத்து அவனையே போடணும்....டெங்குவை ஒழிக்க அசத்தல் ஐடியா...!Representative Image.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு 1,400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இது அதிகரித்துள்ளது. இந்த நிலையில்  ஜூன் முதல் அக்டோபர் வரையில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து காணப்படும். ஆனால், அதற்கு முன்பே இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு அரசை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்த கூடிய கொசுக்களை அளிக்க ஒல்பேச்சியா என்ற திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது சிங்கப்பூர் அரசு. 

ஒல்பேச்சியா திட்டம் என்றல் என்ன?

இது குறித்து அந்த நாட்டின் சுற்றுசூழல் அமைச்சர் கூறுகையில், தொடக்கத்தில் செயற்கையாக வாரத்திற்கு 20 லட்சம் ஏடிஸ் கொசுக்கள் உருவாக்கப்படும், இது படிக்கப்படியாக முன்னேறி பின்னர் வாரத்திற்கு 50 லட்சம் ஏடிஸ் கொசுக்கள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் உருவாக்கப்படும் ஏடிஸ் கொசுக்களிடம் ஒல்பேச்சியா என்ற பாக்டீரியா காணப்படும், இதனை சுமந்துகொண்டு செல்லும் ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடும், பின்னர் பெண் கொசுக்கள் இடும் முட்டையில் இருந்து குஞ்சுகள் பொறியாது. 

அதனால், கொசுக்களும் உற்பத்தியாகாது. டெங்குவை கட்டுப்படுத்தும் நோக்கில், இயற்கையாக உருவான கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்த சிறப்பு கொசுக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்