Diamond hunting : ஆந்திர மாநிலத்தில் உள்ள சில கிராமங்களில் மழைக்காலத்தில் விவசாய நிலங்களில் தேங்கும் தண்ணீரில் இருந்து வைரக்கல் கிடைப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில், பலர் விவசாய நிலத்தில் கிடைத்த வைரத்தை அதிக விலைக்கு விற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்..
வைர வேட்டை
இதனால், ஆந்திர மாநில மக்கள் மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் வைர வேட்டையில் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது. இதனையடுத்து, சிலர் விவசாய நிலங்களில் இருந்து கண்ணாடி போன்ற கற்களை சேகரித்துள்ளார்கள். ஆனால் அது வைரமா என்பது தெரியவில்லை என கூறுகின்றனர்.
குவியும் மக்கள்
இந்தாண்டு ஆந்திர மாநிலத்தில் பெய்த கோடை மழையால் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, பகிடிராய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் வைர வேட்டையில் ஈடுபட குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வைர வேட்டையில் கிராம மக்கள்
இதுகுறித்து வைர வேட்டையில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள், “கடந்த ஆண்டு விவசாயி ஒருவருக்கு கிடைத்த வைரக்கல்லை ஜொனகிரியை சேர்ந்த வைர வியாபாரி 2 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். இதனால் இந்த ஆண்டு மழைக்காலங்களில் வைர வேட்டை தீவிரமாக நடைபெறுகிறது.
இந்தாண்டு கோடை மழை முன்னதாகவே தொடங்கியதால் விவசாய நிலங்களில் வைரத்தை தேட தொடங்கியுள்ளோம். தற்போது வைரக்கற்கள் கிடைத்தால் சொந்த வீடு கட்ட திட்டமிட்டுள்ளோம்’ என கூறினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…