கோவை சரக டிஐஜியாக பணியாற்றிவந்த விஜயகுமார் நேற்று துப்பாக்கில் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை(FIR) வெளியிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் கோவை சரக டிஐஜியாக பணியாற்றிவந்தார். நேற்று காலை அவர் பாதுகாவலரின் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தமிழக காவல்துறையினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய டிஐஜி விஜயகுமாரின் மரணத்திற்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். தற்கொலை செய்துகொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை (ஜூலை.7) 21 குண்டுகள் முழங்க முழு காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆயுதப்படை முதல் நிலை காவலர் ரவிச்சந்திரன் இந்த எப்.ஐ.ஆர்-ஐ பதிவு செய்துள்ளார். அதில், டிஐஜியின் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். கோவை சரகத்திற்கு வந்ததிலிருந்து சரியாக தூக்கம் வரவில்லை என்று டிஐஜி மாத்திரை எடுத்துக்கொள்வார். டிஎஸ்ஆர்-ஐ பார்ப்பதற்காக அவர் 7ம் தேதி 6.30 மணிக்கு வந்தார்.
அலுவலில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் டி.ஐ.ஜி. விஜயகுமார் குடிப்பதற்கு பால் கேட்டார் என்றார். மேலும், காலை 6.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு எனது அறைக்கு டி.ஐ.ஜி. வந்து டிஎஸ்ஆர்-ஐ பார்த்தார். அதன்பின்னர் எனது துப்பாக்கியை கையில எடுத்த டிஐஜி, எப்படி பயன்படுத்துவது என கேட்டுக்கொண்டே வெளியில் சென்றார். நான் வெளியே வருவதற்குள் துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டது. தலையில் ரத்த காயத்துடன் மல்லாந்த நிலையில் டிஐஜி கீழே கிடந்தார். அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இவ்வாறு அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…