Trending News : சிலி நாட்டில் 5,000 ஆண்டுகள் பழமையான மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலியில் நாட்டில் பெரிய தாத்தா என்று அழைக்கப்படும் நான்கு மீட்டர் தடிமனான தண்டு கொண்ட ஒரு பழங்கால அலர்ஸ் மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மரம் 5,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என விஞ்ஞானிகளின் கூறிகின்றனர்.
சிலியில் நாட்டில் உள்ள காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி டாக்டர் ஜொனாதன் பேரிச்சிவிச், மரத்தை சோதனை செய்துள்ளார். அந்த ஆய்வு முடிவில் அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அதன்படி, அலர்ஸ் மிலேனாரியோ என்ற படகோனியன் சைப்ரஸ் மரமானது தற்போது சுமார் 5,484 ஆண்டுகள் பழமையான மரம் என சோதனைகளின் முடிவுகள் தெரிவிப்பதாக கூறினார்.
இதனையடுத்து, இந்த மரத்தை உலகின் மிகப்பழமையான மரம் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது அந்த மரத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…