Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

மதுரை மாநகராட்சி பணிகளில் நிலவும் சுணக்கம் காரணமாகவே அதிருப்தி: எம்எல்ஏ விளக்கம்

Baskarans Updated:
மதுரை மாநகராட்சி பணிகளில் நிலவும் சுணக்கம் காரணமாகவே அதிருப்தி: எம்எல்ஏ விளக்கம்Representative Image.

மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதி பணிகளில் நிலவும் சுணக்கம் காரணமாகவே மாமன்ற கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்ததாகவும், ராஜினாமா செய்வது தனது நோக்கமல்ல எனவும் மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் விளக்கமளித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியின் 19ஆவது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி, ஆணையர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியின் மதிமுக உறுப்பினர் பூமிநாதன் பேசுகையில்,தெற்கு தொகுதிகுட்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. மக்களை எதிர்கொள்ள முடியவில்லை. எனவே என்னுடைய எம்.எல்.ஏ. பதவியை கூட ராஜினாமா செய்துவிடலாம் என நினைக்கிறேன் எனக் கூறினார்.

பின்னர் தான் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதுரை தெற்கு தொகுதியில் சாக்கடை, குடிநீர் பிரச்சனைகள் தொடர்ச்சியாக தீர்க்கப்படாமல் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி சட்டமன்றத்தில், மாமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன். அந்த பணிகளில் நிலவும் சுணக்கம் காரணமாகவே வருத்தம் தெரிவித்தேன். ராஜினாமா செய்ய மாட்டேன். அது எனக்கு நோக்கமல்ல. எம்எல்ஏ-வாக நிறைய செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என விளக்கமளித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்