Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பணமோசடியில் அதிமுக நிர்வாகி கைது...அதிர்ச்சி...!

madhankumar July 17, 2022 & 19:30 [IST]
பணமோசடியில் அதிமுக நிர்வாகி கைது...அதிர்ச்சி...!Representative Image.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பூங்கொடி கிராமத்தில் கடலூர் மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப அணித் தலைவரான புருஷோத்தமன், கடந்த ஆட்சியின் போது நீராதேவி என்பவரிடம் ஆவின் பாலகம் வைத்து தருவதாகக் கூறி ரூபாய் 1 லட்சம் மோசடி செய்ததாகவும் பணத்தைத் திருப்பிக் கேட்ட போது, நீராதேவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல்துறையிடம் புகார் அளிக்கபபட்டிருந்தது.  

 இதனை தவிர, வழிப்பறி செய்தது, மளிகை கடையில் பணம் கேட்டு மிரட்டியது என புருஷோத்தமன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு புகார்கள் அளிக்கபப்ட்டிருந்தது. இந்த நிலையில், புருஷோத்தமனை சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் பல்வேறு புகார்களின் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்