Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகம் வரும் பிரதமர்...! சென்னையில் போலீஸார் குவிப்பு...!

Muthu Kumar July 25, 2022 & 12:45 [IST]
தமிழகம் வரும் பிரதமர்...! சென்னையில் போலீஸார் குவிப்பு...!Representative Image.

மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், இதற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி வருகிற 28, 29 ஆகிய 2 நாட்களும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. அதன்படி, தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் என 5 காவல் அடுக்காக நின்று பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கிக்க உள்ளனர்.

இதனையடுத்து, நேரு ஸ்டேடியம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை போலீசார் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும், பிரதமர் சாலை மார்க்கமாக செல்லும் போது அவரின் பாதுகாப்புக்காக 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

மேலும், கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையில் பிரதமர் செல்லும் சாலைகளிலும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்