தமிழகம் முழுவதும், 600-க்கும் மேற்பட்ட அரசு விரைவு பேருந்துகளுக்கு தீபாவளிக்காக முன்பதிவு செய்வது நாளை முதல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் தீபாவளிப் பண்டிகை வருவதையொட்டி, சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இலட்சக்கணக்கான மக்கள் பயணத்தைத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், தீபாவளிக்கு முந்தைய நாள்களான சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாள்கள் விடுமுறையாக இருப்பதால், அக்டோபர் 21 ஆம் தேதி முதலே பயணத்தைத் தொடர வாய்ப்பு உள்ளது. மேலும், ரயில்களில் முன்பதிவு நடவடிக்கைகள் முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சென்னையிலிருந்து கூடுதலாக சிறப்பு இரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆம்னி பேருந்துக்கான கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டதாக புகார்கள் வெளிவந்தது. இதற்கு அரசு முடிவெடுக்குமாறும் கூறப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது அரசு விரைவு பேருந்துக்கான முன்பதிவு நாளை அதாவது செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இது 30 நாள்களுக்கு முன்னதாகவே பதிவு செய்யக் கூடியவையாக உள்ளது. அதன் படி, www.tnstc.com என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. முதலில் 600-க்கும் அதிகமான பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய இணைக்கப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு அதிகம் ஆவதைத் தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் முன்பதிவுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…